கொவிட்-19

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு சிறப்பாகச் செயல்பட்டதற்கு சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட்டின் திறன்வாய்ந்த தலைமைத்துவம் முக்கியக் காரணம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
கொவிட்-19 காலகட்டத்தில் அரசாங்கம் அறிமுகம் செய்த வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் $8,901.90 மதிப்புள்ள மானியங்களைப் பெற முயன்றதாகச் சந்தேதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏமாற்றியதாகவும் பொய்க் கையெழுத்து இட்டதாகவும் 65 வயது ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் டாங் கொங் சூங், ஏப்ரல் 1ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பாரிஸ்: கொவிட்-19 கிருமிப் பரவலின் முதல் இரண்டு ஆண்டுகளில் உலகெங்கும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கர்ப்பிணிகளிடமிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்று பரவ மிகவும் குறைந்த வாய்ப்பே உள்ளது என்று அண்மைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.