சிங்கப்பூரில் பெரும்பாலான பேரங்காடிகளில் நெகிழிப் பைகளுக்கு 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று திங்கட்கிழமை (06-02-2023) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நெகிழிப் பைக்கு குறைந்தது ஐந்து காசு கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட், ஷெங் சியோங் ஆகிய பேரங்காடிகளில் அனைத்துவிதமான நெகிழி மற்றும் காகிதப் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நெகிழிப் பயன்பாட்டையும் உணவுக்கழிவுகளையும் குறைக்கும் நோக்கில் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டு 6 விழுக்காடு நெகிழிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன.
2022 ஆண்டு தொடக்கம் முதலே நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறு பேரங்காடிகளும் கடைகளும் நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் கடைகளில் 2022ஆம் ஆண்டு முதலே நெகிழிப் பைகளுக்கு 10 காசு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.