பேரங்காடிகளில் நெகிழிப் பைக்குக் கட்டணம்

சிங்கப்பூரில் பெரும்பாலான பேரங்காடிகளில் நெகிழிப் பைகளுக்கு  2023ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று திங்கட்கிழமை (06-02-2023)  நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நெகிழிப் பைக்கு குறைந்தது ஐந்து காசு கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட், ஷெங் சியோங் ஆகிய பேரங்காடிகளில் அனைத்துவிதமான நெகிழி மற்றும் காகிதப் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நெகிழிப் பயன்பாட்டையும் உணவுக்கழிவுகளையும் குறைக்கும் நோக்கில் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. 

சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டு 6 விழுக்காடு நெகிழிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. 

2022 ஆண்டு தொடக்கம் முதலே நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறு பேரங்காடிகளும் கடைகளும் நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன. 

சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் கடைகளில் 2022ஆம் ஆண்டு முதலே நெகிழிப் பைகளுக்கு 10 காசு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!