லாவண்யா வீரராகவன்

Designation :
செய்தியாளர்
சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.
பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பதால் சருமம் பாதிப்படைவது இயல்பு. இதனால் வெப்பமான மாதங்களில் இயல்பான பராமரிப்பு போலன்றி, சருமத்துக்குச் சற்றே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாணவர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட தொழில்நுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்துவது, அவர்களிடம் தமிழைக் கொண்டுசேர்க்கும் மிகச் சிறந்த வழி எனும் நம்பிக்கையில் உருவாகி, தமிழ் மொழி விழாவையொட்டி வெளியீடு கண்டுள்ளது ‘அகரம்’ என்ற மின் அகராதிச் செயலி.
சிங்கப்பூரில் வசிக்கும் பலரும் பணியிடங்களுக்குச் செல்ல பேருந்து, எம்ஆர்டி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்.
மதிப்பெண்களைத் தாண்டி, ஆர்வமுள்ள துறையில் கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி கிட்டும் என நம்புகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்மாணவர் மித்ரா ரென் சச்சிதானந்தன்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.
ஆசியான் அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளின் மின்னிலக்கக் கல்வியறிவு, விழிப்புணர்வு, தயார்நிலை விகிதங்கள் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியக் கூறுகளில் ஒன்றான ‘விரும்தோம்பல்’ குறித்த பயிலரங்கம் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏப்ரல் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இன, சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது செட்டியார் கோவில் சங்கம்.