ஆறாண்டு காலமாக தம் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கும் குடிபோதையில் இருந்த தம் மனைவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்ய தமது பதின்ம வயது மகனைக் தூண்டிய குற்றத்துக்காகவும் 41 வயது தொழில்நுட்பர் ஒருவருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.
தடையுத்தரவு காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் புரிந்த அவர் மீது மேலும் 13 குற்றங்கள் சாட்டப்பட்டன.
2013ல் தமது மகளுக்கு ஒன்பது வயது இருந்தபோது அந்த ஆடவர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கினார் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2019 நவம்பரில் இதுபற்றி தமது அத்தையிடம் அச்சிறுமி கூறியபோது, குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பின்னர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.