புதிதாக 438 பேருக்கு ஓமிக்ரான் தொற்று
சிங்கப்பூரில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்றால் புதிதாக 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) அறிவித்தது. முன்னதாக அந்த எண்ணிக்கை 389ஆக இருந்தது.
ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 438 பேரில் 159 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டனர். எஞ்சிய 279 பேர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை புதிதாக 846 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 750ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 846 பேரில் 446 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள். எஞ்சிய 400 பேர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள்.
வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் செவ்வாய்க்கிழமை 1.71ஆக சற்று குறைந்தது. திங்கட்கிழமை அது 1.83ஆக இருந்தது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 51.1 விழுக்காடாக இருந்தது.
மருத்துவமனைகளில் 165 கொவிட்-19 நோயாளிகள் உள்ளனர். 17 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.