இந்தியாவின் நாகை மாவட்டத்திலுள்ள ஹஸ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மக்காமிற்குக் கொடி அனுப்பிவைக்கும் விழா, பிரம்மாண்ட மௌலூது நிகழ்வுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாகூர் சங்கம் (சிங்கப்பூர்), கன்கா கைரிய்யா, முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
காலை 8 மணி முதல் குர்ஆன் ஓதுதல், மௌலூது ஓதுதல், சலவாத்துடன் தொடங்கவுள்ள நிகழ்ச்சியில் பஅல்வி பள்ளிவாசல் இமாம் உஸ்தாத் ஷேக் ஹபீப் சையது ஹசான் அல்அத்தாஸ், பெர்காஸ் அமைப்பின் தலைவர் உஸ்தாத் ஹாஜி ஹஸ்பி ஹசான் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர். நிகழ்ச்சிகளை ஷேக் முகம்மது சித்திக் பாதுஷா ஒருங்கிணைத்துள்ளார்.
சிக்லாப் சாலையில் அமைந்துள்ள குபூர் காசிமில் நிகழ்வு நடைபெறும். காலை 10.30 மணி முதல் கம்பாங்கான் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மதிய உணவு வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity