வீட்டிற்கு வெளியே விளையாடிய பிள்ளைகள்; கைதான தாயார்

போதைப்பொருள் தொடர்பான வேட்டையின்போது செங்காங் கில் உள்ள ஒரு வீட்டில் 31 வயது மாது ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஃபெர்ன்வேல் ரோட்டில் உள்ள அந்த வீட்டில் 45 வயது ஆடவர் ஒருவரும் கைதானார். இருவரும் சிங்கப்பூரர்கள்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $944,000. போதைப்பொருள்களில் ஆக அதிகமாக 5.6 கிலோ எடையுள்ள ஹெராயின் சிக்கியது. இது, ஹெராயின் புழங்கக்கூடிய சுமார் 2,700 பேருக்கு ஒரு வார காலத்திற்குப் போதுமான அளவு.

பெண்ணைக் கைது செய்தபோது அவரது இரு குழந்தைகளும் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தன. 11 வயது சிறுவனும் 10 வயது சிறுமியும் பின்னர் அவர்களின் உறவினரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.

முன்னதாக, அவ்விரு குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) கூறியது.

“போதைப்பொருள் தொடர்பான இதுபோன்ற பல சம்பவங்களில் குழந்தைகள் துரதிருஷ்டவசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் கடத்திகள் தங்களது சுயநலமான, தீங்கு விளைக்கக்கூடிய செயல்கள் மூலம் மற்றவர் களின் வாழ்வை அழிப்பதோடு தங்களது சொந்தக் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் துன்பத்தைத் தருகின்றனர்,” என சிஎன்பி அதிகாரி செபாஸ்டியன் டான் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!