சிங்கப்பூருக்கும் மலேசியாவின் டிசாருக்கும் இடையே புதிய படகுச் சேவை இன்று தொடங்கியது. ஈராண்டுகளுக்குப் பிறகு, இந்தச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
140 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து டிசாருக்கு இதன் வழி இன்று பயணம் செய்தனர்.
ஒருவழி டிக்கெட் விலை $70. இருவழிக்கான கட்டணம் $118. ஜூலை 7 முதல் அக்டோபர் 6 வரை பாத்தாம் ஃபாஸ்ட் படகுச் சேவை நிறுவனம் இருவழி சேவைக்கு $98 வசூலிக்கிறது.
படகுச் சேவை வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை செயல்படும். சிங்கப்பூரிலிருந்து படகு காலை 8.30 மணிக்கு புறப்படும். டிசாருவிலிருந்து மாலை 5.30க்கு கிளம்பும். பயணம் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் எடுக்கும். படகில் 250 பயணிகள் செல்லலாம்.
படகுச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் கடவுச் சீட்டு, விசா, தடுப்பூசி சான்றிதழ்கள் ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.