விளையாட்டு

பாரிஸ்: பிரான்சின் நட்சத்திரக் காற்பந்து வீரரான ஒலிவியே ஜிரூ, இவ்வாண்டின் யூரோ போட்டிக்குப் பிறகு தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராகச் செயல்பட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை இந்தியா அணுகியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
டப்லின்: யூயேஃபா யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், தொடர்ந்து 51 ஆட்டங்களில் தோல்வியடையாமல் சாதனை படைத்த பயர் லெவர்க்குசனை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது அட்டலான்டா.
சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை மே 21ல் சிங்கப்பூரைச் சேர்ந்த 17 வயது சித்தார்த் ஜகதீஷ் பெற்றார்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (மே 21) நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்ற கோல்கத்தா நைட் ரைடர்ஸ், நான்காவது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.