சமூக அளவில் ஏழுப் பேர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் இருவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 1) புதிதாக 34 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் கிருமித்தொற்று உறுதியான அந்த எழுவரில் மூவர், டான் டோக் செங் மருத்துவமனையில் அண்மையில் தொற்று உறுதியான தாதியுடன் தொடர்புடையவர்கள். அந்த மருத்துவமனை நோயாளிகள், பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் இவர்களுக்குத் தொற்று உறுதியானது.
இதுபோக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 25 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த 25 பேரில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். நால்வர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.