மரப்பலகையால் தாக்கப்பட்ட ஆடவர் மரணம்; இந்திய ஊழியர்மீது குற்றச்சாட்டு

புத்தாண்டு தினமான நேற்று, ஆடவர் ஒருவரை ஆணிகள் கொண்ட மரப்பலகையால் தாக்கி மரணம் விளைவித்ததாக, வெளிநாட்டு ஊழியர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே மற்றொருவரைக் கடுமையாக தாக்கியதாக இந்திய நாட்டவரான பன்னீர் வெற்றிவேல், 26, என்பவர்மீது ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நேற்று ஜனவரி 1ஆம் தேதி பின்னிரவு 1 மணிக்கும் 1.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், திரு ராஜேந்திரன் சண்முகசுந்தரன், 37, என்பவரை பன்னீர் மரப்பலகையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

எண் 20 உட்லண்ட்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க் இ1 அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள தங்குவிடுதி ஒன்றில் இரு ஆடவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பின்னிரவு 1.25 மணியளவில் அந்தத் தகராறு குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. திரு ராஜேந்திரன், தலையில் காயங்களுடன் தரையில் அசைவின்றி கிடந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட பன்னீர், கூடுதல் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 7ஆம் தேதி அவரது வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!