அன்றாட கொவிட்-19 தொற்று இறங்குமுகம்

அன்றாட கொவிட்-19 பாதிப்புகளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) தொடர்ந்து சரிந்தது.

புதிதாக 13,158 பேருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் 1,437 பேர் கொவிட்-19க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சனிக்கிழமை (மார்ச் 5) 16,274 பேருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் 1,559 பேர் இருந்தனர்.

கொவிட்-19 வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது. அது 0.95ஆக உள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்த விகிதம் 1க்குக்கீழ் உள்ளது.
கொவிட்-19க்கு மேலும் ஐவர் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கூடிய விரைவில் தளர்த்தப்படலாம் என்ற நம்பிக்கையுடன் நிலவரத்தை தான் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.

கொவிட்-19 விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுவது குறித்து பிப்ரவரி 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 25ஆம் தேதி அது நடப்புக்கு வரவிருந்தது.

எனினும், அன்றாட தொற்றுப் பாதிப்பு உயர்ந்ததால் விதிமுறை மாற்றம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!