அன்றாட கொவிட்-19 பாதிப்புகளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) தொடர்ந்து சரிந்தது.
புதிதாக 13,158 பேருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் 1,437 பேர் கொவிட்-19க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சனிக்கிழமை (மார்ச் 5) 16,274 பேருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் 1,559 பேர் இருந்தனர்.
கொவிட்-19 வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது. அது 0.95ஆக உள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்த விகிதம் 1க்குக்கீழ் உள்ளது.
கொவிட்-19க்கு மேலும் ஐவர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கூடிய விரைவில் தளர்த்தப்படலாம் என்ற நம்பிக்கையுடன் நிலவரத்தை தான் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.
கொவிட்-19 விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுவது குறித்து பிப்ரவரி 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 25ஆம் தேதி அது நடப்புக்கு வரவிருந்தது.
எனினும், அன்றாட தொற்றுப் பாதிப்பு உயர்ந்ததால் விதிமுறை மாற்றம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.